கோவை: அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோல்ட் வின்ஸ் பகுதியில் இருந்து உப்பிலிப்பாளையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு ₹1,157 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.மேம்பாலத்தின் வரைப்படங்கள் மற்றும் மாதிரிகளையும் பார்வையிட்டார், இதையடுத்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.