திருப்பூர்: அவிநாசி அருகே தனியார் பனியன் நிறுவன மேலாளர் வித்யாசாகர் (47) வீட்டில் 50 சவரன் நகை திருடபட்டுள்ளது. வித்யாசாகரின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து 50 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். தனியார் பனியன் நிறுவன மேலாளர் வித்யாசாகர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.