திருவள்ளூர்: ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 15-ல் முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற நகைக்கடையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். பிரகாஷை கட்டிப் போட்டு ரூ.1.15 கோடி தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம், ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.