மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104, ஸ்மித் 71, மார்னஸ் 62 ரன்கள் குவித்தனர்.
தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் நெதர்லாந்து 21 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் நெதர்லாந்து அணியை ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலககோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 6 புள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலியா, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துள்ளது!