Friday, May 10, 2024
Home » நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

by Suresh

சென்னை: நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனம், நடிகர் விஷால் இடையேயான கடன் விவகாரத்தில் ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா நியமிக்கப்பட்டிருந்தார். அன்புச்செழியனிடம் விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை லைகா செலுத்தியிருந்தது. ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செல்வனிடன் ரூ.21 கொடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்று கொண்டு செலுத்தியது.

இந்த தொகையை முழுவதும் செலுத்தும் வரை விஷால் படத்தின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்வதற்கு ஆடிட்டர் கிருஷ்ணா என்பவரை நியமித்து கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் ஆவணங்களை தன்னிடம் கேட்டுள்ளதாகவும், ஆடிட்டர் அனுப்பிய கடிதம் தற்போது தான் தனக்கு கிடைத்துள்ளது. எனவே அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதற்குள் ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi