Tuesday, May 14, 2024
Home » எந்த நடைமேடையில் ஊர் பஸ் நிற்கும்

எந்த நடைமேடையில் ஊர் பஸ் நிற்கும்

by Dhanush Kumar

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் எந்த நடைமேடையில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும் என்ற தகவலை சிஎம்டிஏ அறிவித்துள்ளது. வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கடந்தாண்டு டிசம்பரில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்ட மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி கடந்த 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர்த்து மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தது. தற்போது 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற வழிகாட்டியை சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது.

* நடைமேடை 1: மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும்.

* நடைமேடை 2: வில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகள்.

* நடைமேடை 3: மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, வீரசோழன், ராமேஸ்வரம்.

* நடைமேடை 4: மன்னார்குடி, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், கும்பகோணம், குமுளி, கரூர்.

* நடைமேடை 5: வேளாங்கண்ணி, மன்னார்குடி, மயிலாடுதுறை, பேராவூரணி, பெரம்பலூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நன்னிலம், துறையூர், திரூவாரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, அரியலூர்.

* நடைமேடை 6: மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நாமக்கல், திருவாரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், குருவாயூர், கரூர், எர்ணாகுளம், ஊட்டி, ஈரோடு.

* நடைமேடை 7: வந்தவாசி, மேல்மலையனூர், திருவண்ணாமலை, போளூர், செஞ்சி, செங்கம்

* நடைமேடை 8: ஜெயங்கொண்டம், விழுப்புரம், திருக்கோயிலூர், திண்டிவனம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர்.

* நடைமேடை 9: விருத்தாசலம், வடலூர், புதுச்சேரி, நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், கடலூர்.

* 10 அடி உயர,16 அடி அகலமின்சுவர் திரை

ஏற்கனவே காஞ்சிபுரம், கடலூர், மதுரை ஆகிய மூன்று இடங்களில் மின் சுவர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து 4வது மின்சுவராக தாம்பரம் பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மின்சுவர் 16 அடி அகலம், 10 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த மின் சுவரின் வழியாக அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும். முதல்வரின் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

* இந்த 9 நடைமேடைகளில் எங்கு எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை கட்டணமில்லாமல் தெரிந்துகொள்ள 149 என்ற எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம், இவை தவிர்த்து சிஎம்டிஏவின் சிற்றிடைப் பேருந்துகள் குறித்த விவரங்களுக்கு 7845700557, 7845727920, பொதுவான சந்தேகங்களுக்கு சிஎம்டிஏ உதவி எண்கள் – 7845740924 / 7845764645 ஆகிய எண்களுக்கு அழைத்து பொதுமக்கள் தீர்வு காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

13 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi