ஜிசிர் அல்ஷுகுர்: வடமேற்கு சிரியா மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் ஜிசிர் அல்ஷுகுர் நகரத்தில் உள்ள சந்தை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வடமேற்கு சிரியாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் கூறியுள்ளது. ஆனால் இதுகுறித்து சிரியாவோ, ரஷ்யாவோ எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
வடமேற்கு சிரியா மீது வான்வழி தாக்குதல்:9 பேர் பலி
previous post