டெல்லி: அசாம் முதல்வர் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த குற்ற வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரி வழக்குகளை ED விசாரிக்கிறது. மணல் கொள்கை தொடர்பாக வேறு எந்த மாநிலத்திலாவது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறதா? என்று கபில்சிபல் கேள்வி எழுப்பினார். மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க ஒன்றிய அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.