மும்பை: 13வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் பாகிஸ்தான், இலங்கையில் நடைறெ உள்ளது. இதில் 6 அணிகள் 2 பிரிவுகளாக பங்கேற்கின்றன. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், குரூப் 2 பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப். 17ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான அட்டவணை இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. பாகிஸ்தானின் லாகூர், இலங்கையின் தம்புல்லாவில் போட்டி நடைபெறலாம் என தெரிகிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் கொழும்பில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காலம் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அட்டவணை தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான், இலங்கை வாரியங்களுடன் பேசி வருகிறது.