சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தகவல் தெரிவித்துள்ளார். ஜ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜானகி ராமன், ஹேமந்த்குமார் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.