சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 49 சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 49 நேரடி சொத்துகள் விற்பனை உத்தரவு பெறுவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி சம்பவத்தில் 7,000 முகவர்கள் அடையாளம் காணப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.