சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அதன் இயக்குநர்கள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர். சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி செய்தது. அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டது.