மதுரை: அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். அறந்தாங்கி நகராட்சி சார்பில் ரூ.30 கோடியில் 1000 அடி ஆழ்துளை கிணறு இருக்கும் பகுதிகளில் 10 போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக 10 போர்வெல் அமைக்கப்பட்டால் கிராம விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.