பெய்ஜிங்: தைவானில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசுகையில்,‘‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதலில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏனென்றால் அவர்களது தோலின் நிறம், உணவு பழக்கவழக்கங்கள் எங்களுடையதுபோன்றே இருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இனவெறியை தூண்டும் வகையில் அவரது கருத்துக்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. தனது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.