சென்னை: உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை பட்டியல் வெளியிட்டதால் வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புக் கேட்க தவறினால் அண்ணாமலை ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தர விடக்கோரி வழக்கு தொடரப்படும் என உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.