சென்னை: தான் பேசியதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட நிலையில் அவர் விளக்கமளித்தார். முதல்வர் குறித்தோ, அமைச்சர் உதயநிதி குறித்தோ தாம் எதுவும் தவறாக பேசவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.