நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவுக்காக மரத்தை தள்ளியபோது மின்சாரம் தாக்கி யானை பலியாகியுள்ளது. மரத்தை யானை தள்ளியபோது தாழ்வாக சென்ற மின்கம்பி மீது கிளைகள் பட்டதில் மின்சாரம் தாக்கியது. யானைகள் செல்லும் பகுதிகளில் மின்கம்பி தாழ்வாக செல்வதால் யானை இறக்க காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.