தெலுங்கானா: ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் போலீசாரின் வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்ற பணத்தில் இலங்கையில் தங்கம் வாங்கி இந்தியாவுக்கு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் தலைமறைவாக உள்ள அப்பள காதர்பாய் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டப்படுகிறது.