ஆந்திரா: ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல்
நிலைகொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாப்பட்லாவுக்கு அருகே தெற்கு ஆந்திர கடற்கரையை அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்க உள்ளது. புயல் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.