கடலூர்: கடலூர் பாரதி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தன்னை தள்ளி விட்டதாக நினைத்து போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது. பிரதான சாலையில் பைக் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைக்கை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.