Sunday, May 5, 2024
Home » செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபான் பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபான் பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

by Dhanush Kumar

சென்னை: செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபான் பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரில் இர்ஃபான் பயணித்தாரா என தகவல் வெளியாகவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைமலைநகர் பகுதியில் குறிப்பாக முனிசிபாலிட்டி அலுவலகத்துக்கு எதிராக நேற்று இரவு ஒரு சொகுசு கார் ஒன்று மோதி பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்தில உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பத்மாவதி உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அதன் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.விசாரணை மேற்கொண்டதில் அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் அசாருதின் என்பது தெரிய வந்திருந்தது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது சொகுசு கார் என்பது பிரபல யூடியூபர் இர்ஃபான் என்பவருக்கு சொந்தமான பென்ஸ் கார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த விபத்து நடந்தபோது அவர் அதில் பயணித்து இருக்கிறாரா அல்லது அவர் ஒட்டி இருக்கிறாரா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதற்கட்டமாக காரை ஒட்டி வந்ததாக அசார் என்பவரை கைது செய்து விசாரணை என்பதை மேற்கொண்டு வருகின்றனர். இவர் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி, விபத்துக்குள்ளாகி இருக்கிறாரா அல்லது குடி போதையில் இது போன்று சொகுசு காரை ஒட்டி விபத்துல்லாகிறுகிறாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi