ஆம்பூர்: ஆம்பூர் அருகே 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் ெசய்தாராம். மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உம்ராபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரமேஷை தேடி வந்தனர். அரங்கல்துருகம் அருகே ரமேஷ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அரங்கல்துருகம் சென்ற போலீசார், அங்கு மறைந்திருந்த ரமேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.