சென்னை: ஜனவரி 27-ஆம் தேதிக்குள் வெள்ள பாதிப்பு நிதியை வழங்க இருப்பதாக அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார் என்று டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். நாளை மறுநாள் டெல்லி திரும்பும் ஒன்றிய அரசின் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா கூறினார். சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனே வழங்குமாறு வலியுறுத்தினேன் என்று டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.