சென்னை: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து விதியை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக டிடிவி மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை எனவும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.