Thursday, May 9, 2024
Home » அம்பத்தூரில் கோயில் திருவிழாவில் தகராறு காவல்நிலையத்தில் புகாரளித்த டிரைவர் வீடு சூறையாடல்: 4 பேர் கைது

அம்பத்தூரில் கோயில் திருவிழாவில் தகராறு காவல்நிலையத்தில் புகாரளித்த டிரைவர் வீடு சூறையாடல்: 4 பேர் கைது

by Arun Kumar

அம்பத்தூர்: அம்பத்தூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், காவல்நிலையத்தில் புகார் அளித்த டிரைவர் வீடு சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மெயின்ரோடு வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (53). டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது வீடு அருகே இவருக்கு சொந்தமான 2 வீட்டு மனைகள் உள்ளன.

இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் (38) என்பவர் போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்றுள்ளார். இதையறிந்த கோவிந்தராஜ், கடந்த வாரம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதியில் கோயில் திருவிழா நடந்துள்ளது. கோயில் திருவிழாவில் கோவிந்தராஜ் குடும்பத்தோடு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜசேகர், கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோவிந்தராஜ் கோயில் வாசலில் நின்றுகொண்டிந்தபோது, அங்கு வந்த ராஜசேகர் மற்றும் மணிகண்டன் (27) ஆகியோர் கோவிந்தராஜை சரமாரி தாக்கியுள்ளனர். இதுசம்பந்தமாக கோவிந்தராஜ் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்அடிப்படையில் போலீசார் ராஜசேகரை அழைத்து விசாரித்து எச்சரித்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராஜசேகர், அடியாட்களுடன் கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த கோவிந்தராஜிடம் என் மீது எப்படி புகார் அளிக்கலாம்’ என்று கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் அடித்து உடைத்து சூறையாடி குடும்பத்தினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ராஜசேகர் (38), மணிகண்டன் (27), தீனதயாளன் (35), சுரேஷ் (36) ஆகிய 4 பேரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

eighteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi