Saturday, July 27, 2024
Home » சொத்து எல்லாம் போச்சே என புலம்பித் தவிக்கும் இலைக்கட்சி வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொத்து எல்லாம் போச்சே என புலம்பித் தவிக்கும் இலைக்கட்சி வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘சேம்சைடு கோல் அடித்து கோடியை ஏப்பம் விட்டுட்டாங்களாமே சுயேச்சைக்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி மக்களவை தேர்தல் முடிவால் ஆளுங்கட்சி தரப்பு ஆடிப்போய் இருக்காம்.. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வாக்குவங்கி கணிசமாக சரிந்துள்ளதால் தேஜ கூட்டணிக்குள் சலசலப்பு உண்டாயிருக்கு.. இத்தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜவும், காங்கிரசும் சுயேச்சைகளின் ஆதரவை பெறுவதில் முனைப்பு காட்டின. இதில் காங்கிரஸ் வேட்பாளரின் அரசியல் முதிர்வு வைத்தியம், அக்கட்சிக்கு கைகொடுத்திருப்பது தேர்தல் முடிவில் ெதரியவரவே அக்கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்காங்க.. ஆனால் ஆட்சி, பண பலத்துடன் களமிறங்கி புல்லட் சாமியின் எம்எல்ஏக்கள் மற்றும் சில சுயேச்சைகளுக்கு வலை வீசப்பட்டிருந்த நிலையில் ஓட்டுவங்கியில் தடாலடியாக கவிழ்த்து விடப்பட்டுள்ளதால் பெருத்த ஏமாற்றத்தில் பாஜ வேட்பாளரான சிவாயமானவர் தரப்பு உள்ளதாம்.. ஏனாமில் தன்னை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற இளம் எம்எல்ஏ, பாஜவுக்கு தான் ஆதரவு கொடுத்திருப்பதை ஓட்டு வங்கியில் நிரூபித்து மாஸ் காட்டிவிட்ட நிலையில் புதுச்சேரியில் ஒளிமிக்க ராஜாவாக வலம் வரும் எம்எல்ஏவை புல்லட் சாமி கூறியதை பாஜ நம்பி மோசம் போனதுதான் தற்போதைய அரசியல் ஹைலட்டாக பேச்சுகள் உலாவுகிறது. தேர்தல் செலவுக்காக ‘ப’ விட்டமினாக கொடுத்த சுமார் ஒன்றரை கோடியை ஒளிமிக்க அந்த ராஜா சுருட்டி ஏப்பம் விட்டிருக்கிறாராம்.. இதுபோன்று வணிகர்களிடம் செல்வாக்கு கொண்ட எம்எல்ஏவும், பல கோடியை ஏப்பம் விட்டதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம்.. தேர்தல் முடிவில் குளறுபடிகள் வெட்ட வெளிச்சமாகவே ஆளுங்கட்சி தரப்பில் ஆர்வமுடன் விசாரித்தபோது காவல்துறை கெடுபிடியால்தான் பட்டுவாடாவை முழுமைப்படுத்த முடியவில்லைனு சொல்ல, உள்துறையை கையில் வைத்திருக்கும் சிவாயமானவர் ஆடிப்போய் விட்டாராம்.. அதேவேளையில் சேம்சைடு கோல் அடித்த ஒளிமிக்க ராஜாவும் மற்றும் வணிகர்களிடம் செல்வமிக்க எம்எல்ஏவும், இப்போதே சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் விசுவாசிகளாக மாம்பழ கட்சி நிர்வாகிங்க இருந்ததும், மைக்குக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்ததும் புகையா கிளம்பியிருக்காமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் கூட்டணி வச்ச மாம்பழத்தின் நிலைமை, தற்போது உள்ளதும் போச்சுடா என்ற ரீதியில்தான் இருக்காம்.. இதற்கிடையில் சேலத்துக்காரரின் சொந்த ஊரில் மாம்பழ நிர்வாகிகள் இலைக்கு சப்போர்ட்டா இருந்தது அம்பலமாகி இருக்காம்.. மாம்பழ எம்எல்ஏக்கள் பதவி வகிக்கும் தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இலைக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைச்சது இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்காம்.. குறிப்பா, கடந்த அசெம்பிளி எலக்‌ஷனில் இலையுடன் போட்ட கூட்டணியை இன்றளவும் ரகசியமாக தொடர்ந்து கொண்டே இருக்காங்களாம் இங்குள்ள மாம்பழ நிர்வாகிங்க.. அது பார்லிமென்ட் எலக்‌ஷன் முடிவிலும் வெளிப்பட்டிருக்காம்.. உதாரணமாக அதியமான் கோட்ைட பார்லிமென்டில் போட்டியிட்ட கட்சி தலைவரின் மனைவிக்கு அணை இருக்கும் தொகுதியில் கிடைத்த ஓட்டுக்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றமா போச்சாம்.. இந்த ஊரில் நம்ம கட்சிக்காரர் எம்எல்ஏவாக இருந்தும் ஓட்டு குறைஞ்சது எப்படின்னு இப்போ தலைமை தலையை உருட்டிக்கிட்டு இருக்காம்.. அதேபோல் மாங்கனி பார்லிமென்டில் வெஸ்ட் அசெம்பிளி மாம்பழ கட்சி வசம்தான் இருக்கு.. இங்கேயும் மாம்பழ வேட்பாளருக்கு சொற்ப ஓட்டுதான் கிடைச்சியிருக்காம்.. இங்கெல்லாம் இலையின் ஓட்டுக்கள் கொஞ்சம் ஏறி இருந்ததாம்.. இதுக்கெல்லாம் உள்ளூர் மாம்பழ நிர்வாகிகள் சேலத்துக்காரரின் விசுவாசிகளாக இருந்ததுதான் காரணம் என்ற தகவல் தீயாய் பரவ ஆரம்பிச்சிருக்காம்.. இது ஒருபுறமிருக்க, மாங்கனி சிட்டிக்கு உட்பட்ட தொகுதிகளில் சில சுற்றுகளில் மாம்பழத்தை விட மைக்குக்கு அதிக ஓட்டுகள் கிடைச்சதும் புகையா கிளம்ப ஆரம்பிச்சிருக்காம்…’’ என முடித்தார் விக்கியானந்தா.
‘‘எலக்‌ஷன்ல நின்னு, இருந்த சொத்தும் போச்சேன்னு தவிக்கிறாராமே இலைக்கட்சி வேட்பாளர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கோணம் பாதியான மக்களவை தொகுதியில இலை கட்சி வேட்பாளர் தோல்விய சந்திச்சிருக்காரு.. இவரு நடந்த எலக்ஷன்ல 6 சட்டமன்ற தொகுதிகள்ல குறைவான வாக்குகளைத்தான் வாங்கி இருக்காரு.. ஒவ்வொரு சுற்றுக்கும் இலை தொண்டர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்துச்சு.. ஒரு சுற்றுல கூட 15 ஆயிரம் வாக்குகளை நெருங்கவே முடியலையாம்.. எலக்‌ஷனுக்காக இலை கட்சியில போட்டி போட்ட வேட்பாளரு, தன்னோட சொத்துகளை எல்லாம் விற்று, அடமானம் வெச்சதுதான் மிச்சமாம்.. வாக்கு எண்ணும் மையத்துல, இலை பார்ட்டி, பழம் பார்ட்டி வேட்பாளருங்க நாம கூட்டணியாக நின்றிருந்தா கூட ரெண்டு பேர்ல யாராவது ஜெயிச்சிருக்கலாம்னு பீல் பண்ணி பேசிக்கிட்டதாக சொல்றாங்க.. அதோட, ஏற்கனவே வெற்றி பெற்ற சீனியருங்களும் யாரும், மக்களவையில் போட்டியிட முன்வராத நேரத்துல ஒரு ஒன்றிய செயலாளரை வேட்பாளரா நிறுத்திட்டு, அவரு சொத்துகளையும் இழக்க வெச்சி மொட்டையடிச்சுட்டாங்களேன்னு தொண்டர்களும் பரபரப்பா பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

seven − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi