பா.ஜ. ஆட்சி மக்களுக்கு செய்த அநியாயங்கள் குறித்து துண்டு பிரசுரம் மூலம் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அகில இந்திய காங்கிரஸ் சமீபத்தில் 10 ஆண்டு பா.ஜ ஆட்சியின் மக்கள் விரோத அநியாயங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.
அந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் துண்டு பிரசுரம் தயாரிக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து மக்கள் விரோத பா.ஜ ஆட்சிக்கு எதிராக பரப்புரை இயக்கத்தை மார்ச் முதல்
வாரத்தில் காங்கிரஸ் இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறது.