Sunday, June 2, 2024
Home » அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவு: ஐகோர்ட் கிளை தடை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவு: ஐகோர்ட் கிளை தடை

by Lavanya

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் ஸ்ரீரங்கம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர் 2 வரை நியமனம் செய்தனர். பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டிருந்தது. விசாரணை செய்த தனி நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்கள்பணி நியமனத்தை ரத்து செய்திருந்தார். மேலும் பல்வேறு வருடங்களாக பணியிலிருந்த இரண்டு அர்ச்சகர்களுக்கு பணி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகளை வழங்கியது.

குறிப்பாக உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் முழு உத்தரவு பிறப்பித்தது. எந்த உத்தரவையும் தனி நீதிபதி கவனத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று தான் தமிழக அரசின் எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு அந்த பணியாளருடைய நியமனம் ரத்து செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi