Friday, May 10, 2024
Home » ஆலங்குளத்தில் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா

ஆலங்குளத்தில் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா

by Lakshmipathi

*அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

நெல்லை : தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா வரவேற்றார். நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து கல்லூரியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஆலடி அருணா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பாலாஜி சிறப்புரையாற்றினார். விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றினார்.

முன்னாள் அமைச்சரும் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான டிபிஎம் மைதீன்கான், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி சந்திரபோஸ், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டலம் மற்றும் தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.

விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளியில் பயிலும் 10ம்வகுப்பு, 11ம்வகுப்பு, 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் செல்லத்துரை, சங்கரன்கோவில் லாலாசங்கர பாண்டியன், குருவிகுளம் கடற்கரை, கிறிஸ்டோபர், சுரண்டை ஜெயபாலன், தென்காசி துணை சேர்மன் கனகராஜ் பாண்டியன், கடையம் முன்னாள் யூனியன் சேர்மன் செல்வி சங்கு கிருஷ்ணன், கடையம் பெரும்பத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கு கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ரஞ்சித் மணிகண்டன், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi