Friday, May 17, 2024
Home » சாதனைகளைவிட இந்தியாவுக்காக ஆடுவதே சிறப்பு: ஆட்டநாயகன் அக்சர்பட்டேல் உருக்கம்

சாதனைகளைவிட இந்தியாவுக்காக ஆடுவதே சிறப்பு: ஆட்டநாயகன் அக்சர்பட்டேல் உருக்கம்

by Neethimaan

இந்தூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அக்சர் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 2வது டி 20 போட்டியில் 4 ஓவர்களில் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு அக்சர் பட்டேல் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 2000 ரன்கள், பந்துவீச்சில் 200 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை அக்சர் பட்டேல் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜடேஜா இந்த சாதனையை படைத்திருந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு அக்சர் பட்டேல் கூறுகையில், “நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் தற்போது தான் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன் என்ற சாதனை எனக்கு தெரியும்.

ஆனால் சாதனைகளை விட இந்தியாவுக்காக நன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். கடந்த சில ஆண்டுகளாக நான் எவ்வளவு விக்கெட் எடுத்தேன் என்பதே நான் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. தற்போது பந்துகளை மெதுவான முறையில் வீச முயற்சி செய்கிறேன். எனது லென்த்துக்களை நான் மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறேன். தற்போது ஆட்டத்தின் அனைத்து சூழலிலும் பந்துகளை வீசக்கூடிய உத்வேகமும் நம்பிக்கையும் என்னிடம் இருக்கிறது. பவர் பிளேவில் கூட தற்போது நான் பந்து வீச தயாராக இருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலராக நீங்கள் ஜொலிக்க வேண்டுமென்றால் மனதளவில் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது பேட்ஸ்மேன் என் ஓவரில் சிக்சர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அடிக்கட்டும்.

அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஏனென்றால் இன்னொரு முறை அதே சிக்சர் அடிக்கும் போது அவர் ஆட்டம் இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் எனது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என் திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை. பேட்ஸ்மேன் அடித்தாலும் அடிக்கவில்லை என்றாலும் என் திட்டத்தை தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்து விடுகிறார்கள் என்றார் அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

twenty − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi