பாலசோர்: ஆகாஷ் -என்ஜி அதிவேக, சுறுசுறுப்பான வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை ஆகும். சுமார் 80 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம், சந்திப்பூர், கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் ஏவுகணை சோதனை நேற்று காலை வெற்றிகரமாக நடந்தது. மிகக் குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா விமான இலக்கைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகாஷ் ஏவுகணை சோதனை
previous post