சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று காலை 6 மணிக்கு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. இதில் பயணிக்க 158 பேர் அதிகாலை 5 மணிக்கே வந்து விட்டனர்.அந்த விமானம், நேற்று துபாயில் இருந்து தாமதமாக சென்னை வந்தது. இதையடுத்து டெல்லிக்கு மூன்றரை மணி நேரம் தாமதமாக, காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் 158 பயணிகளும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 146 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. இயந்திர கோளாறு காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இப்படி 2 ஏர் இந்தியா விமானங்கள் இயந்திர கோளாறு மற்றும் எதிர் முனையில் வரும் விமானம் தாமதம் போன்ற காரணங்களால், 300க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.