திருவள்ளூர்: ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2021இல் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சிகாகோ செல்லவந்த மாணவன் அலைக்கழிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.