சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2001-06 அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்தது தொடர்பாக மறு ஆய்வு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வளர்மதி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார்.