சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் இபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் பங்கேற்றுள்ளனர்.