நாகை: கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.101 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பால பணி தொடங்கியுள்ளது. நாகை, அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி ரயில்வே மேம்பால கட்டுமான பணி ரூ.101 கோடியில் தொடங்கப்பட்டது. மேம்பால பணியை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார். 1312 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக அமைய உள்ள ரயில்வே மேம்பாலத்தை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.