Tuesday, May 21, 2024
Home » அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்

அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்

by MuthuKumar

திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. பின்னர் இது முன்விரோதமாக மாறியது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் சேகர் கொலை செய்யப்பட்டார். இதேபோல் 2021ம் ஆண்டு பெரியசாமியின் மகன் சிலம்பு (எ) சிலம்பரசன் கொலை செய்யப்பட்டார். இதனால் இருகுடும்பத்தினருக்கும் முன்விரோத பகை இருந்து வருகிறது.

கேபிள் சேகரின் மனைவி கயல்விழி. அதிமுக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவரது மூத்த மகன் முத்துக்குமார்(28). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி அருகே இன்று காலை 11 மணியளவில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த நபர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினர்.

இதில் முகம், தலை சிதைந்து அந்த இடத்திலேயே முத்துக்குமார் பலியானார். இதையடுத்து பைக்குகளை அங்கேயே விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள், அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது முத்துக்குமார் இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் ெகாலையாளிகள் விட்டுச்சென்ற பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

முத்துக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பெரியசாமி தரப்பை சேர்ந்த லோகநாதன், தினேஷ், மணி, குமரேசன் ஆகியோர் 2 பைக்குகளில் வந்து முத்துக்குமாரை படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eight + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi