மதுரை: விவசாயத்திற்காக பயன்படக்கூடிய குளத்தை 6 வாரங்களில் சீரமைக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாலராஜ் தொடர்ந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே அரளிக்குத்து குளத்தை சீரமைத்து மக்கள் பயன்படுத்த வழிவகை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.