சென்னை: கடுமையாக முயற்சி செய்தால் நிச்சயம் வாய்ப்பு வரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல்
ஆர்.சண்முகசுந்தரம் மூத்த வக்கீல்கள்பி.எஸ்.ராமன், பி.வில்சன் எம்பி ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதனை பாராட்டி பேசினர்.
நிகழ்ச்சியில், மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், நீதிபதிகள் ஆதிகேசவலு, தண்டபாணி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், பார்கவுன்சில் உறுப்பினர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சி.பால்கனகராஜ், டி.செல்வம், கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, கே.பாலு, எம்.வேல்முருகன், ஜெ.பிரிசில்லா பாண்டியன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். பார்கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசியதாவது: கடுமையாக முயற்சி செய்தால் நல்ல வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதைத்தான் இங்கு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.