சென்னை : உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவையில் 1 லட்சம் பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.