சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.கூடுதல் விலைக்கு மது விற்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் 21 வயதுக்கு குறைவாக உள்ள இளைஞர்களுக்கு மது விற்ககூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.