டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த செபிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவன பங்குகள் பெரும் சரிவடைந்தன. அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிந்ததை அடுத்து அது பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.