கோவை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில் கோவை தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ராமர், சீதை வேடம் போட்டு பா.ஜ.க. கொடியை கழுத்தில் அணிவித்து பங்கேற்க வைத்துள்ளனர். குழந்தைகளை அழைத்து வந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரதமர் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில் கோவை ஸ்ரீசாய்பாபா பள்ளி நிர்வாகம் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.