Sunday, May 12, 2024
Home » முகப்பரு தற்காத்துக் கொள்ளும் வழிகள்!

முகப்பரு தற்காத்துக் கொள்ளும் வழிகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் முக அழகையே கெடுக்கும். அதை எப்படி சரிசெய்வது என்று யோசிப்பதைவிட பரு வருவதற்கு முன்பே தவிர்த்துக் கொள்வது நல்லதல்லவா. அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

*பரு வந்தால் அதைத் தொட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், பருவை தொடும்போது அந்த பாக்டீரியா மேலும் பரவும். பருக்களை அழுத்தும்போது அந்த இடத்தில் வடு, தழும்பு உருவாகவும் வாய்ப்புள்ளது என்பதால் அதைச் செய்யவே கூடாது.

*வெளியில் சென்று வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவுவது நலம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகவும், பொலிவாகவும் இருக்கும்.

*ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். தேவையான அளவு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியத்துடன்
இருக்கும்.

*பரு பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளஷ், ஃபவுண்டேஷன் போன்றவை சருமத் துளைகளை அடைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை என்பதால், இவற்றை தேவை முடிந்ததும் கழுவி விடவும்.

*தலைமுடியை கவனிக்க வேண்டும். தலை, முடியில் எண்ணெய் அதிகமாக இருந்தாலும் அது முகத்தையும் எண்ணெய்ப் பசை ஆக்கும். எனவே, தலையை அடிக்கடி
அலசவும்.

*நல்ல சத்தான உணவு உண்பது நல்லது. மாவுச்சத்து, இனிப்பு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*முகம் எண்ணெய்ப் பசை இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரம், முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இல்லை என்றால், சுரப்பிகள் எண்ணெய் மற்றும் சீபத்தை உற்பத்தி செய்து, பருக்களை உண்டாக்கும்.

*தலையணை, படுக்கை விரிப்பு, மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்யவும். துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்தவும். இவையெல்லாம் பாக்டீரியா பரவுவதைத் தடுக்கும்.

*மன அழுத்தம் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். எனவே, முடிந்தவரை மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: தவநிதி

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi