சண்டிகர்: பஞ்சாப்பில் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சண்டிகரில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறும். பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியை விரும்புகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை 92 இடங்களில் மக்கள் வெற்றி பெற செய்தனர்’ என்றார்.