டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இல்லத்தின் முன் ஆம் ஆத்மி அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் டெல்லி அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்துள்ள ஆளுநருக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தை மதித்து ஆளுநர் தங்களை சந்திப்பார் என்று வாயிலில் காத்திருப்பதாக அமைச்சர்கள் பேட்டியளித்தார்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi