இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி சார்பில் டெல்லி, குஜராத், அரியானா மாநிலங்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்க ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் 4, குஜராத்தில் 2, அரியானாவில் ஒரு தொகுதி ஆம்ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு இன்று நடக்கிறது. ஆம்ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அசாமில் 3 வேட்பாளர்களையும், குஜராத்தின் பருச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளுக்கு 2 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.