Saturday, May 18, 2024
Home » காதலனுடன் சென்ற இளம்பெண் பலாத்காரம்: நிர்வாணமாக்கி சரமாரி தாக்குதல்

காதலனுடன் சென்ற இளம்பெண் பலாத்காரம்: நிர்வாணமாக்கி சரமாரி தாக்குதல்

by Neethimaan


நாகர்கோவில்: கேரள மாநிலத்துக்கு காதலனுடன் சென்ற குமரியை சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி 2 பேர் பலாத்காரம் செய்ததோடு, நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். அதேபோல் நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். 2 பேரும் காதலித்து வந்தனர். ஆகவே பல்வேறு இடங்களுக்கும் அடிக்கடி ஜோடியாக வலம் வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தனர். அதன்படி காதல் ஜோடி சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பொழியூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பருத்தியூர் என்னும் இடத்தில் ஆறு ஒன்று கடலில் கலக்கும் பகுதியில் பொழுதை கழிக்க சென்று உள்ளனர். காதலன் தன்னுடன் துணைக்கு பக்கத்து ஊரை சேர்ந்த நண்பனையும் அழைத்து சென்று இருக்கிறார்.

நேரம் செல்வதை அறியாமல் அவர்கள் ஜாலியாக பொழுதை கழித்தனர். இரவில் அந்த பகுதியில் உள்ள ஏவிஎம் கால்வாய் கரையில் இருட்டான பகுதியில் காதல் ஜோடி நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். காதல் ஜோடிக்கு தொல்லையாக இருக்க காதலனின் நண்பன் விரும்பவில்லை. ஆகவே அவர் சற்று தொலைவில் அமர்ந்து இருந்தார். இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அந்த பகுதிக்கு 2 பேர் வந்துள்ளனர். இருவரும் திடீரென காதலனையும், சற்று தொலைவில் இருந்த அவரது நண்பரையும் அழைத்து துணிகளை கழற்ற வைத்ததோடு, சரமாரியாக தாக்கியும் உள்ளனர். தொடர்ந்து காதலியையும் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக 2 பேரும் பலாத்காரம் செய்து உள்ளனர்.அதை வீடியோவாக பதிவு செய்து சக நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில் அந்த கும்பல் 2 பேரையும் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளன. காதலனையும் அவரது நண்பரையும் தாக்கும் போது, எங்களை அடிக்காதீர்கள் என்று வாலிபர்கள் அழுவதும், இளம்பெண்ணை வீடியோ எடுக்கும் போது, பெண் தனது கையால் முகத்தை மூடுவதும், வலுக்கட்டாயமாக கையை நீக்குவதும், பிறகு ஆடையை அகற்றுமாறு கூறி மிரட்டுவதும், இளம் பெண் அழுதவாறு என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கூறுவதும் ஆடியோவாக பதிவாகி உள்ளது. காதலனுடன் சென்ற காதலியை 2 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

10 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi