சென்னை: குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளான். பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் மாணவனின் கால்கள் துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, படியில் பயணம் செய்த மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் கீழே இறக்கி தாக்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது. மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.