சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா நடராஜன் கடந்த 9.8.2023 அன்று சென்னையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, அப்போலோ மருத்துவமனையில் (Apollo Cancer Centre) தீவிர கண்காணிப்பு பிரிவில் சிசிக்சை பெற்று வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லலிதா நடராஜனை நேற்று (30.08.2023) மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து, அவரது கணவரிடம் அன்னாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து லலிதா நடராஜனின் சிசிக்சைக்காக முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ரூபாய் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்கள். இதற்கான காசோலையினை லலிதா நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் என். கணேஷ் அவர்களிடம் இன்று (31.08.2023) காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். அப்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு, மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, ஆகியோர் உடன் இருந்தனர்.